தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்கில் தயாராகி வரும் சில முன்னணி நடிகர்களின் படங்களை பான்--இந்தியா படமாக வெளியிட ஆரம்பித்தார்கள். ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சில படங்களும் பான்--இந்தியா படமாக ஐந்து மொழிகளிலும் வெளியாக ஆரம்பித்தன.
ஹாலிவுட் நடிகர் போல இருக்கிறார் என சில சினிமா பிரபலங்களாலேயே பாராட்டப்பட்டவர் நடிகர் அஜித். அவருடைய படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமே அதிக வரவேற்பு இருக்கிறது. மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும், வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பு இருந்ததில்லை.
தமிழ் சினிமாவில் இருந்து விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாக உள்ள படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார்கள். எனவே, அஜித்தும் அவருடைய 61வது படமாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தை பான்--இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால்தான், படத்தில் மலையாளம், தெலுங்கிலிருந்து சில முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை நடிக்கலாம் என்றும் தெரிகிறது.
'வலிமை' படத்தின் வெளியீட்டு அறிவிப்பிற்குப் பிறகு அஜித்தின் 61வது படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.