வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பான்-இந்தியா நாயகனாக மாறிவிட்டார். 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் 'சலார்'. இப்படம் ஸ்ருதிஹாசனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி நேற்று தன்னுடைய 37வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றியும் அவரது உணவு உபசரிப்பு பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்.
“சலார்' படத்தின் கதை அற்புதமானது, அதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். இயக்குனர் பிரஷாந்த்தின் இயக்கம் வித்தியாசமான பார்வை கொண்டது.
பிரபாஸ் மிகவும் அற்புதமான மனிதர். அடுத்து அவர் ஒரு சிறந்த சாப்பாட்டுப் பிரியர். நான் பார்த்ததிலேயே இந்த அளவிற்கு சாப்பாட்டின் மீது பாசம் கொண்டவர் இவர்தான். தினமும் மற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று விரும்புபவர். உணவு மூலம் அன்பைப் பரிமாறுபவர். அவரது சாப்பாட்டு முறை நார்மலான ஒன்று அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.