பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பான்-இந்தியா நாயகனாக மாறிவிட்டார். 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் 'சலார்'. இப்படம் ஸ்ருதிஹாசனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி நேற்று தன்னுடைய 37வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றியும் அவரது உணவு உபசரிப்பு பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்.
“சலார்' படத்தின் கதை அற்புதமானது, அதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். இயக்குனர் பிரஷாந்த்தின் இயக்கம் வித்தியாசமான பார்வை கொண்டது.
பிரபாஸ் மிகவும் அற்புதமான மனிதர். அடுத்து அவர் ஒரு சிறந்த சாப்பாட்டுப் பிரியர். நான் பார்த்ததிலேயே இந்த அளவிற்கு சாப்பாட்டின் மீது பாசம் கொண்டவர் இவர்தான். தினமும் மற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று விரும்புபவர். உணவு மூலம் அன்பைப் பரிமாறுபவர். அவரது சாப்பாட்டு முறை நார்மலான ஒன்று அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.