பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தனது தாயைப் போல நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்தார். கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வந்த கல்யாணி தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த நவ-26ல் தமிழில் சிம்புவுடன் நடித்த மாநாடு, டிசம்பர் 3ல் மோகன்லாலின் மரைக்காயர், ஜன-21ல் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த ஹிருதயம், தற்பொழுது ஜன- 24ல் பிரித்விராஜ் ஜோடியாக நடித்த ப்ரோ டாடி என கடந்த 2 மாதங்களில் மட்டும் கல்யாணி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி உள்ளது.
இதில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல தற்போது வெளியான ஹிருதயம் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடிடியில் வெளியான ப்ரோ டாடி படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகையாக மாறும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.




