'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! |

இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தனது தாயைப் போல நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்தார். கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வந்த கல்யாணி தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த நவ-26ல் தமிழில் சிம்புவுடன் நடித்த மாநாடு, டிசம்பர் 3ல் மோகன்லாலின் மரைக்காயர், ஜன-21ல் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த ஹிருதயம், தற்பொழுது ஜன- 24ல் பிரித்விராஜ் ஜோடியாக நடித்த ப்ரோ டாடி என கடந்த 2 மாதங்களில் மட்டும் கல்யாணி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி உள்ளது.
இதில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல தற்போது வெளியான ஹிருதயம் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடிடியில் வெளியான ப்ரோ டாடி படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகையாக மாறும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.