அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி |
இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தனது தாயைப் போல நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்தார். கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வந்த கல்யாணி தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த நவ-26ல் தமிழில் சிம்புவுடன் நடித்த மாநாடு, டிசம்பர் 3ல் மோகன்லாலின் மரைக்காயர், ஜன-21ல் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த ஹிருதயம், தற்பொழுது ஜன- 24ல் பிரித்விராஜ் ஜோடியாக நடித்த ப்ரோ டாடி என கடந்த 2 மாதங்களில் மட்டும் கல்யாணி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி உள்ளது.
இதில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல தற்போது வெளியான ஹிருதயம் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடிடியில் வெளியான ப்ரோ டாடி படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகையாக மாறும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.