10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

மும்பை : கடந்த 2007ல் ராஜஸ்தான் மாநிலத்தில் 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட் நடிகையும், குஷி என்ற தமிழ் படத்தில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டி(46), பங்கேற்றார். ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது. மேடையில் இருந்தபோது, திடீரென ஷில்பாவை கட்டியணைத்து ரிச்சர்ட் கெரே முத்தமிட்டார்.
இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிச்சர்ட் கெரே மன்னிப்பு கேட்டார். இந நிலையில் 'மேடையில் முத்தமிட்டதற்கு ஷில்பா ஷெட்டி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது திட்டமிட்டு நடந்த நாடகம்' என, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 'ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டவர். திட்டமிட்டு அந்த சம்பவம் நடக்கவில்லை. அதனால், அவர் குற்றமற்றவர்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.