செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், தனுசுடன் இணைந்து நடித்திருந்த அட்ராங்கிரே என்ற படம் சமீபத்தில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு பங்களாவில் தற்போது வசித்துவரும் அக்ஷய் குமார், மும்பையின் மேற்கு பகுதியில் 1878 சதுரடியில் ஒரு புதிய பங்களா வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு 7.8 கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த பங்களா குறித்த ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மீடியாக்களில் வெளியானது போன்று புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. எனது புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்கிறார்.