பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், தனுசுடன் இணைந்து நடித்திருந்த அட்ராங்கிரே என்ற படம் சமீபத்தில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு பங்களாவில் தற்போது வசித்துவரும் அக்ஷய் குமார், மும்பையின் மேற்கு பகுதியில் 1878 சதுரடியில் ஒரு புதிய பங்களா வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு 7.8 கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த பங்களா குறித்த ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மீடியாக்களில் வெளியானது போன்று புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. எனது புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்கிறார்.