'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், தனுசுடன் இணைந்து நடித்திருந்த அட்ராங்கிரே என்ற படம் சமீபத்தில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு பங்களாவில் தற்போது வசித்துவரும் அக்ஷய் குமார், மும்பையின் மேற்கு பகுதியில் 1878 சதுரடியில் ஒரு புதிய பங்களா வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு 7.8 கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த பங்களா குறித்த ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மீடியாக்களில் வெளியானது போன்று புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. எனது புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்கிறார்.