இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், தனுசுடன் இணைந்து நடித்திருந்த அட்ராங்கிரே என்ற படம் சமீபத்தில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு பங்களாவில் தற்போது வசித்துவரும் அக்ஷய் குமார், மும்பையின் மேற்கு பகுதியில் 1878 சதுரடியில் ஒரு புதிய பங்களா வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு 7.8 கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த பங்களா குறித்த ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மீடியாக்களில் வெளியானது போன்று புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. எனது புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்கிறார்.