சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலி இருவருக்கும் கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தையின் தனிப்பட்ட உரிமை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அக்குழந்தையின் புகைப்படங்களை எந்த விதத்திலும் எடுத்து வெளியிட வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது அனுஷ்கா அவரது குழந்தையான வாமிகாவை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகிவிட்டது. அப்புகைப்படம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதன்பின்பு அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், “நேற்று மைதானத்தில் எங்களது மகளின் புகைப்படம் படமாக்கப்பட்டு அது பெரிய அளவில் ஷேர் ஆகிவிட்டது குறித்து அறிந்தோம். கேமரா எங்களை நோக்கி இருக்கிறது என்ற கவனமில்லாத காரணத்தால் நாங்கள் படம் பிடிக்கப்பட்டோம். இந்த விவகாரத்தில் எங்கள் வேண்டுகோளும், நிலைப்பாடும் அதேதான். ஏற்கெனவே நாங்கள் சொன்னபடி வாமிகாவின் புகைப்படத்தை படமெடுக்கவோ, வெளியிடவோ செய்யாமல் இருந்தால் நாங்கள் உண்மையில் பாராட்டுவோம்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இருப்பினும் வாமிகாவின் புகைப்படம் பகிரப்பட்டு தற்போது டுவிட்டரில் #VamikaKohli என்று டிரென்டிங்கில் வேறு உள்ளது.