'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய ஹீரோக்கள் பான்-இந்தியா ஸ்டார்களாக மாறி வருகிறார்கள். பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் தனி மார்க்கெட் உருவாகி விட்டது. சமீபத்தில் 'புஷ்பா' வெற்றி முலம் அல்லு அர்ஜுனும் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அடுத்தடுத்து மேலும் சில தென்னிந்திய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
அடிக்கடி சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் தற்போது தென்னிந்திய ஹீரோக்களைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “தென்னிந்திய ஸ்டார்களும், தென்னிந்திய படங்களும் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள்…1.அவர்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள், 2. அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள், மேற்கத்திய மயமாக இருக்கவில்லை, 3. அவர்கள் தொழில்முறையும் ஆர்வமும் இணையற்றது,” எனக் குறிப்பிட்டு, “பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது,” என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்கு அடுத்தடுத்து சில நடிகர்கள் வந்து வெற்றி பெறுவதால் பாலிவுட் ஹீரோக்களை வெறுப்பேற்ற இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறாரோ கங்கனா ?.