தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய ஹீரோக்கள் பான்-இந்தியா ஸ்டார்களாக மாறி வருகிறார்கள். பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் தனி மார்க்கெட் உருவாகி விட்டது. சமீபத்தில் 'புஷ்பா' வெற்றி முலம் அல்லு அர்ஜுனும் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அடுத்தடுத்து மேலும் சில தென்னிந்திய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
அடிக்கடி சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் தற்போது தென்னிந்திய ஹீரோக்களைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “தென்னிந்திய ஸ்டார்களும், தென்னிந்திய படங்களும் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள்…1.அவர்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள், 2. அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள், மேற்கத்திய மயமாக இருக்கவில்லை, 3. அவர்கள் தொழில்முறையும் ஆர்வமும் இணையற்றது,” எனக் குறிப்பிட்டு, “பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது,” என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்கு அடுத்தடுத்து சில நடிகர்கள் வந்து வெற்றி பெறுவதால் பாலிவுட் ஹீரோக்களை வெறுப்பேற்ற இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறாரோ கங்கனா ?.