பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலி இருவருக்கும் கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தையின் தனிப்பட்ட உரிமை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அக்குழந்தையின் புகைப்படங்களை எந்த விதத்திலும் எடுத்து வெளியிட வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது அனுஷ்கா அவரது குழந்தையான வாமிகாவை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகிவிட்டது. அப்புகைப்படம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதன்பின்பு அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், “நேற்று மைதானத்தில் எங்களது மகளின் புகைப்படம் படமாக்கப்பட்டு அது பெரிய அளவில் ஷேர் ஆகிவிட்டது குறித்து அறிந்தோம். கேமரா எங்களை நோக்கி இருக்கிறது என்ற கவனமில்லாத காரணத்தால் நாங்கள் படம் பிடிக்கப்பட்டோம். இந்த விவகாரத்தில் எங்கள் வேண்டுகோளும், நிலைப்பாடும் அதேதான். ஏற்கெனவே நாங்கள் சொன்னபடி வாமிகாவின் புகைப்படத்தை படமெடுக்கவோ, வெளியிடவோ செய்யாமல் இருந்தால் நாங்கள் உண்மையில் பாராட்டுவோம்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இருப்பினும் வாமிகாவின் புகைப்படம் பகிரப்பட்டு தற்போது டுவிட்டரில் #VamikaKohli என்று டிரென்டிங்கில் வேறு உள்ளது.