என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியானது. தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, இந்த புஷ்பா படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அதோடு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ராஷ்மிக்காவுக்கு ஊக்கத்தொகை வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில் புஷ்பா முதல் பாகத்தில் நடிக்க அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்து இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார் ராஷ்மிகா. மேலும், ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகின்றன.