டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

டார்லிங், மரகத நாணயம், மொட்ட சிவா கெட்ட சிவா என பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. சென்னையில் உள்ள இவரது வீட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த கேமரா மற்றும் அவரது ஆடைகளை அந்த இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் மீது சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்ததை அடுத்து திருப்பூரில் அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து அவர் திருடிய பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளனர். அதையடுத்து அந்த இளைஞர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறிய நிக்கி கல்ராணி, அவர் மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று உள்ளார்.




