அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
டார்லிங், மரகத நாணயம், மொட்ட சிவா கெட்ட சிவா என பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. சென்னையில் உள்ள இவரது வீட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த கேமரா மற்றும் அவரது ஆடைகளை அந்த இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் மீது சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்ததை அடுத்து திருப்பூரில் அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து அவர் திருடிய பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளனர். அதையடுத்து அந்த இளைஞர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறிய நிக்கி கல்ராணி, அவர் மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று உள்ளார்.