என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களது திருமண உறவை முறித்துக் கொள்ள போவதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்கள். அவர்கள் இருவரது சமூக வலைதளங்களிலும் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இது திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது இரண்டு மகன்களுக்கு பெற்றோராக இருக்கிறார்கள். அதனால் தங்களது கருத்து வேறுபாடுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தனுஷின் அண்ணனான இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட பதிவு ஒன்று மீண்டும் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. காரணம் அந்த பதிவில், தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்திவிட்டு ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று அந்தப் பிரச்னையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என பதிவிட்டு இருந்தார் செல்வராகவன். தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பிரச்னை நடந்து கொண்டிருந்தபோதுதான் செல்வராகவன் இப்படி பதிவிட்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.