தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் தனுசும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரஸ்பரம் அறிவித்திருக்கிறார்கள். இருவரும் முறைப்படி கோர்ட் மூலம் விவாகரத்து பெற இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுசின் தந்தை கஸ்தூரிராஜா இதுபற்றி கூறியிருப்பதாவது:
தனுசும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சின்ன சண்டை அவ்வளவுதான். இது வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் இப்போது ஐதராபத்தில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இருவருக்கும் தக்க அறிவுரை கூறியிருக்கிறேன். விரைவில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். என்றார்.
இயக்குனரும், விஜய்யின் தந்தையுமாக எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கணவன்-மனைவி பிரிந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். இது கனவாக இருக்க கூடாதா, இது பொய்யான செய்தியாக இருக்க கூடாதா என்று நினைக்கிறேன். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு சர்வ சாதாரணம். அதற்கு பிரிவு தீர்வல்ல. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதெங்கே... நமக்கும் கீழே உள்ளவர்கோடி என்பதை நினைத்து நிம்மதி தேடு என்கிற கண்ணதாசன் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. நல்லதே நடக்கும். என்று கூறியிருக்கிறார்.