நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
நடிகர் தனுசும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரஸ்பரம் அறிவித்திருக்கிறார்கள். இருவரும் முறைப்படி கோர்ட் மூலம் விவாகரத்து பெற இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுசின் தந்தை கஸ்தூரிராஜா இதுபற்றி கூறியிருப்பதாவது:
தனுசும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சின்ன சண்டை அவ்வளவுதான். இது வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் இப்போது ஐதராபத்தில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இருவருக்கும் தக்க அறிவுரை கூறியிருக்கிறேன். விரைவில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். என்றார்.
இயக்குனரும், விஜய்யின் தந்தையுமாக எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கணவன்-மனைவி பிரிந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். இது கனவாக இருக்க கூடாதா, இது பொய்யான செய்தியாக இருக்க கூடாதா என்று நினைக்கிறேன். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு சர்வ சாதாரணம். அதற்கு பிரிவு தீர்வல்ல. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதெங்கே... நமக்கும் கீழே உள்ளவர்கோடி என்பதை நினைத்து நிம்மதி தேடு என்கிற கண்ணதாசன் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. நல்லதே நடக்கும். என்று கூறியிருக்கிறார்.