அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால் தேர்தல் இரண்டு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் ஜனவரி 23ம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருந்த இயக்குனர் சங்க தேர்தல் 25ம் தேதி செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது சிரமம் என்பதால் செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.