தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகிய இருவருமே இந்த சூப்பர்மேன் பவர் கொண்ட நபர்களாக மின்னல் முரளி(கள்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு டீ மாஸ்டரும் ஒரு டெய்லரும் சூப்பர்மேன் பவர் பெற்றால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான கற்பனையில் இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இந்தப் படத்தின் டிரைலரில் பயன்படுத்தி இருந்த பின்னணி இசையை ஏன் படத்தில் பயன்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த பஷில் ஜோசப், “ஒரே படத்தில் அனைத்தையும் பயன்படுத்தி விட முடியாது.. ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருந்தால், அதில் நிச்சயமாக இந்த விடுபட்டுப்போன பின்னணி இசையை பயன்படுத்துவோம்” என கூறினார்.
அப்படியானால் மின்னல் முரளி இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்கு, “இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறேன். அப்படி இருந்தால் நிச்சயமாக இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.