சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகிய இருவருமே இந்த சூப்பர்மேன் பவர் கொண்ட நபர்களாக மின்னல் முரளி(கள்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு டீ மாஸ்டரும் ஒரு டெய்லரும் சூப்பர்மேன் பவர் பெற்றால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான கற்பனையில் இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இந்தப் படத்தின் டிரைலரில் பயன்படுத்தி இருந்த பின்னணி இசையை ஏன் படத்தில் பயன்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த பஷில் ஜோசப், “ஒரே படத்தில் அனைத்தையும் பயன்படுத்தி விட முடியாது.. ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருந்தால், அதில் நிச்சயமாக இந்த விடுபட்டுப்போன பின்னணி இசையை பயன்படுத்துவோம்” என கூறினார்.
அப்படியானால் மின்னல் முரளி இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்கு, “இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறேன். அப்படி இருந்தால் நிச்சயமாக இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.