ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகிய இருவருமே இந்த சூப்பர்மேன் பவர் கொண்ட நபர்களாக மின்னல் முரளி(கள்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு டீ மாஸ்டரும் ஒரு டெய்லரும் சூப்பர்மேன் பவர் பெற்றால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான கற்பனையில் இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இந்தப் படத்தின் டிரைலரில் பயன்படுத்தி இருந்த பின்னணி இசையை ஏன் படத்தில் பயன்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த பஷில் ஜோசப், “ஒரே படத்தில் அனைத்தையும் பயன்படுத்தி விட முடியாது.. ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருந்தால், அதில் நிச்சயமாக இந்த விடுபட்டுப்போன பின்னணி இசையை பயன்படுத்துவோம்” என கூறினார்.
அப்படியானால் மின்னல் முரளி இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்கு, “இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறேன். அப்படி இருந்தால் நிச்சயமாக இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.