அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கிட்டத்தட்ட 18 வருடங்களாக நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவு குறித்த தகவலை வெளியிட்டிருந்தனர். இத்தனைக்கும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக அரசல் புரசலாக கூட சமீபத்தில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதனாலேயே இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களையும் திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தனது சகோதரி ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷுடனான பிரிவு செய்தியை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே, சமூக வலைதளப் பக்கத்தில் தனது புரொபைல் படத்தை மாற்றிவிட்டார்.
தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தானும் ஐஸ்வர்யாவும் சிறு குழந்தைகளாக இருந்தபோது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது புரொபைல் பிக்சராக மாற்றி வைத்துள்ளார்.