நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கிட்டத்தட்ட 18 வருடங்களாக நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவு குறித்த தகவலை வெளியிட்டிருந்தனர். இத்தனைக்கும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக அரசல் புரசலாக கூட சமீபத்தில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதனாலேயே இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களையும் திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தனது சகோதரி ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷுடனான பிரிவு செய்தியை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே, சமூக வலைதளப் பக்கத்தில் தனது புரொபைல் படத்தை மாற்றிவிட்டார்.
தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தானும் ஐஸ்வர்யாவும் சிறு குழந்தைகளாக இருந்தபோது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது புரொபைல் பிக்சராக மாற்றி வைத்துள்ளார்.