'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கொரோனா பரவல் ஒமிக்ரான் வடிவில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. பல சினிமா பிரபலங்கள் இந்த அலையில் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். புத்தாண்டைக் கொண்டாட லண்டன் சென்றிருந்த போது அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரவியது.
ஐந்து நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா வந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் த்ரிஷா. கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக இன்று காலை அறிவித்துள்ளார்.
“ரிப்போர்ட்டில் 'நெகட்டிவ்' என படிக்கும் போது, இதை விட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி. 2022, இப்போது உனக்காக நான் ரெடி,” என செல்பியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த 2022ம் ஆண்டு வெளிவர உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தர வாய்ப்புள்ளது.