இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

கொரோனா பரவல் ஒமிக்ரான் வடிவில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. பல சினிமா பிரபலங்கள் இந்த அலையில் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். புத்தாண்டைக் கொண்டாட லண்டன் சென்றிருந்த போது அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரவியது.
ஐந்து நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா வந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் த்ரிஷா. கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக இன்று காலை அறிவித்துள்ளார்.
“ரிப்போர்ட்டில் 'நெகட்டிவ்' என படிக்கும் போது, இதை விட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி. 2022, இப்போது உனக்காக நான் ரெடி,” என செல்பியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த 2022ம் ஆண்டு வெளிவர உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தர வாய்ப்புள்ளது.




