ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேபி. தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் கதாநாயகியாக இருக்கிறார். சிறந்த நடன கலைஞராக இருக்கும் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேபியுடன் கமெண்டில் பேசிய ஒருவர், 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியல் மாதிரியான சின்ன ஊடகத்தில் நடிக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கேபி, 'சீரியலை சின்ன விசயமாக நினைக்கவில்லை. சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ, ஒரு நடிகராக நாம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று விசிட் செய்யும் சின்னத்திரை ஒன்றும் சின்ன விசயமல்ல' என்று பதில் கூறியுள்ளார்.
அதே கேள்வியை மீண்டும் ஒரு ரசிகர் கேட்க, கடுப்பான கேபி, 'இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ, உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? உங்க வேலைய பத்தி நான் கமெண்ட் பன்றேனா? வாழ விடுங்க' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.