காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, ஞாயிறு முழு ஊரடங்கு என்றாலும் இந்த வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜனவரி 7ம் தேதியன்று மூன்று புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகியது.
இந்த வாரம் பொங்கல் வாரம் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். பொங்கலுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' வெளிவராததே இதற்குக் காரணம்.
ஜனவரி 13ம் தேதி, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, மருத, நாய்சேகர்” ஆகிய படங்களும், ஜனவரி 14ம் தேதி 'எஜிபி, பாசக்காரப் பய, தேள்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இவற்றில் எந்தப் படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்பது அந்தந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தது.
தினசரி 3 காட்சிகள் ஓடினால் கூட போதும், போட்ட முதலீட்டை எப்படியாவது எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படங்களை வெளியிடுகிறார்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்தே இவற்றின் வசூலும் அமையும்.