ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் | அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம் | சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி | நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி | சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும் | 'சர்வம் மாயா' வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்' | டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண் | ராம்சரண் படத்தால் இயக்குனர் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது : ராஜமவுலி ஆருடம் | ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்ட சில காட்சிகள் ராஜா சாப் படத்தில் சேர்ப்பு | காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி |

மைனா, ஜன்னல் ஓரம், வீரம், ஆள், குரங்கு பொம்மை, கொடி வீரன், காற்றின்மொழி படங்களில் நடித்தவர் விதார்த். முதன் முறையாக ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று டிஷ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
வில்லனாக நடித்தது குறித்து அவர் கூறியதாவது: இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது திறனை வேறு பரிமாணத்தில் காட்ட உதவும் என்று நான் நம்பினேன்.
சூழ்நிலையை வெல்ல எப்போதும் தந்திரமான முறைகளை நம்பும் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த கதாப்பாத்திரம் பொதுமக்களிடம் தூய்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும், ஆனால் கிராம மக்களிடையே சச்சரவு மற்றும் மோதலை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருக்கும்.
இயக்குனர் என் கதாபாத்திரத்தில் என்ன வேண்டினாரோ, அதை என் முழு அர்ப்பணிப்பை தந்து நிறைவேற்றினேன். அன்பறிவு படத்தில் பணியாற்றுவது மிகவும் அசாதாரண அனுபவமாக இருந்தது, ஏனெனில் அதில் நெப்போலியன் , ஆஷா சரத் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இருந்தனர். என்றார்.