வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… |

மைனா, ஜன்னல் ஓரம், வீரம், ஆள், குரங்கு பொம்மை, கொடி வீரன், காற்றின்மொழி படங்களில் நடித்தவர் விதார்த். முதன் முறையாக ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று டிஷ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
வில்லனாக நடித்தது குறித்து அவர் கூறியதாவது: இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது திறனை வேறு பரிமாணத்தில் காட்ட உதவும் என்று நான் நம்பினேன்.
சூழ்நிலையை வெல்ல எப்போதும் தந்திரமான முறைகளை நம்பும் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த கதாப்பாத்திரம் பொதுமக்களிடம் தூய்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும், ஆனால் கிராம மக்களிடையே சச்சரவு மற்றும் மோதலை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருக்கும்.
இயக்குனர் என் கதாபாத்திரத்தில் என்ன வேண்டினாரோ, அதை என் முழு அர்ப்பணிப்பை தந்து நிறைவேற்றினேன். அன்பறிவு படத்தில் பணியாற்றுவது மிகவும் அசாதாரண அனுபவமாக இருந்தது, ஏனெனில் அதில் நெப்போலியன் , ஆஷா சரத் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இருந்தனர். என்றார்.