டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
போக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் கடல் கன்னியை மையப்படுத்திய படமாக உருவாகிறது. இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு முன் சிலர் கடல் கன்னி வேடத்தில் சிலர் நடித்திருந்தாலும் இந்த படம் தான் முழுநீள படமாக உருவாகிறது. அந்தவகையில் முழு நீள கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர் தான். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர், 'துப்பாக்கி முனை' என்ற படத்தை இதற்கு முன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்காக சென்னை தி.நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் செட்டி போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 கோடையில் படம் வெளியாக உள்ளது. படத்தில் அதிகளவில் அனிமேஷன் காட்சிகள் உள்ளன. படம் முடிந்ததும் இதற்கான பணிகள் துவங்குகின்றன.