இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
கொரோனா கால நாயகன் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சோனுசூட் என்று சொல்லும். அந்த அளவுக்கு கொரோனா முதல் அலையில் இருந்து இப்போது வரைக்கும் மக்களுக்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள், தொழிலாளர்களை விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வந்தது. மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது. மருத்துவ பணியாளர்களுக்கு தனது ஓட்டலை வழங்கியது உள்பட ஏராளமான பணிகளை செய்தார்.
இரண்டாவது அலையில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கினார். வேலை வாய்ப்புக்கான ஒருங்கிணைப்புகளை செய்தார். தற்போது பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார். பஞ்சாப் மாநிலம் மேகா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள், மற்றும் சமூக சேவகர்களுக்கு ஆயிரம் சைக்கிள்களை வழங்கினார். இதன் மூலம் சுமார் 45 கிராமப்புற பள்ளி மாணவிகள் பயன் அடைந்தனர்.
இதுகுறித்து சோனுசூட் கூறியிருப்பதாது: பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால், கடும் குளிரில் மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வது சிரமமாக உள்ளது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரித்துள்ளது. அதனால் இந்த பணியை துவங்கி உள்ளேன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதியுடைய மாணவர்களைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். என்றார்.