சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா. 1960களில் தொடங்கி 2020 வரை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். அதிகமாக வில்லன் வேடங்களில் நடித்தார். கடைசியாக பவுன்டி அவுர் பாப்லி படத்தில் நடித்தார்.
86 வயதாகும் பிரேம் சோப்ரா முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகி மனைவி உமா சோப்ராவுடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் காய்ச்சல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மனைவி அவருடன் இருந்ததால் அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மனைவிக்கு 75 வயது ஆகிறது.
தற்போது இருவரும் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பாலிவுட் நட்சத்திரங்கள் இடையே கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது.