சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டர் மிகவும் பிரபலம். நாய்சேகர் என்ற பெயரில் காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் இயக்கி உள்ளார். குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஹீரோயின். ஜார்ஜ் மரியான், ஸ்ரீமன், ஞானசம்பந்தம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ்(சங்கர்) இசை அமைத்துள்ளார்.
படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் வடிவேலு ரீ என்ட்ரிக்கு இந்த டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் வடிவேலு படம் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் தயாராக இருக்கிறது.
நாய் சேகர் படத்தில் சதீசுக்கும், நாய்களுக்குமான பிரச்சினை தான் கதை. நாய் மனிதன் போன்றும், சதீஷ் நாய் போன்றும் நடந்து கொள்வார். இந்த படத்தில் நாய் பேசும். இதற்காக நடிகர் மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். சதீஷ், சிவாவின் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் இதனை செய்து கொடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.