குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டர் மிகவும் பிரபலம். நாய்சேகர் என்ற பெயரில் காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் இயக்கி உள்ளார். குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஹீரோயின். ஜார்ஜ் மரியான், ஸ்ரீமன், ஞானசம்பந்தம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ்(சங்கர்) இசை அமைத்துள்ளார்.
படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் வடிவேலு ரீ என்ட்ரிக்கு இந்த டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் வடிவேலு படம் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் தயாராக இருக்கிறது.
நாய் சேகர் படத்தில் சதீசுக்கும், நாய்களுக்குமான பிரச்சினை தான் கதை. நாய் மனிதன் போன்றும், சதீஷ் நாய் போன்றும் நடந்து கொள்வார். இந்த படத்தில் நாய் பேசும். இதற்காக நடிகர் மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். சதீஷ், சிவாவின் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் இதனை செய்து கொடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.