‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டர் மிகவும் பிரபலம். நாய்சேகர் என்ற பெயரில் காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் இயக்கி உள்ளார். குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஹீரோயின். ஜார்ஜ் மரியான், ஸ்ரீமன், ஞானசம்பந்தம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ்(சங்கர்) இசை அமைத்துள்ளார்.
படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் வடிவேலு ரீ என்ட்ரிக்கு இந்த டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் வடிவேலு படம் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் தயாராக இருக்கிறது.
நாய் சேகர் படத்தில் சதீசுக்கும், நாய்களுக்குமான பிரச்சினை தான் கதை. நாய் மனிதன் போன்றும், சதீஷ் நாய் போன்றும் நடந்து கொள்வார். இந்த படத்தில் நாய் பேசும். இதற்காக நடிகர் மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். சதீஷ், சிவாவின் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் இதனை செய்து கொடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.