ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ராஜமவுலி இயக்கி உள்ள பாகுபலி , ஆர் ஆர் ஆர், தமிழில் விஜய் நடித்த மெர்சல் மற்றும் தலைவி என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். அதோடு ஹிந்தியிலும் சில படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் விஜயேந்திர பிரசாத், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் என்ற படத்துக்கும் கதை எழுதியிருந்தார். கபீர் கான் இயக்கிய இந்த படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இதற்கும் விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார்.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான்கான், பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த படத்திற்கு பவன் புத்ர பைஜான் என டைட்டில் வைத்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் படத்தையும் பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர்கான் தான் இயக்கப் போகிறாரா இல்லை வேறு இயக்குனர் இருக்கிறார்களா என்பது குறித்த தகவலை சல்மான்கான் வெளியிடவில்லை. என்றாலும் தனது பிறந்தநாளில் புதிய படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக சல்மான்கான் வெளியிட்டதால் அவரது ரசிகர்கள் அந்தப் படத்தின் டைட்டிலை மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.