பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட பல படங்களில், பல மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். ரஞ்சிஷ் ஹி சாஹி என்ற வெப்சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு நாட்டை சேர்ந்த பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. நடிகை அமலாபாலும் இந்த விசாவை பெற்றுள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், “இப்படிப்பட்ட கவுரவத்தை பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன். இந்த புண்ணிய பூமி உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றியது மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் பார்வை மற்றும் குறிக்கோள் எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பதே ஆகும். இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும் ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் அமலாபால்.