பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
விலங்குகள் பாதுகாப்புக்காக உலக அளவில் செயல்பட்டு வரும் அமைப்பு பீட்டா. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியதால் பிரபலமானது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் பாதுகாப்பில் அக்கறையோடு ஈடுபடுகிறவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டின் சிறந்த விலங்குள் பாதுகாவலராக பாலிவுட் நடிகை அலியா பட்டை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து பீட்டா அமைப்பின் மக்கள் தொடர்பு இயக்குனர் சச்சின் பங்கேரா கூறியதாவது: ஆலியா பட் சைவ உணவை ஊக்குவித்து வருகிறார். அதோடு விலங்குகளிடம் கருணையும், அன்பையும் காட்ட அடுத்த தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறார். நாய், பூனை போன்ற விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தும் பீட்டா அமைப்பின் பிரசாரத்தில் பங்கேற்றார். மேலும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அதற்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பீட்டா இந்தியா பேஷன் விருது வழங்கப்படுகிறது. என்றார்.
இதற்கு முன் இந்த விருதை நடிகர்கள் கபில் சர்மா, ஜான் ஆபிரகாம், நடிகைகள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் கபூர் , அஹுஜா ஆகியோர் பெற்றுள்ளனர்.