ரோஜா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் | மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார் | நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய் | ‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா | வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ் | வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார் | இரண்டிரண்டு நாயகர்ளுடன் பத்து தல Vs விடுதலை | திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா | படப்பிடிப்பில் அக்ஷய் குமாருக்கு விபத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள் | நல்ல படங்கள் இல்லை, தடுமாறும் தியேட்டர்கள், பல காட்சிகள் ரத்து |
விலங்குகள் பாதுகாப்புக்காக உலக அளவில் செயல்பட்டு வரும் அமைப்பு பீட்டா. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியதால் பிரபலமானது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் பாதுகாப்பில் அக்கறையோடு ஈடுபடுகிறவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டின் சிறந்த விலங்குள் பாதுகாவலராக பாலிவுட் நடிகை அலியா பட்டை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து பீட்டா அமைப்பின் மக்கள் தொடர்பு இயக்குனர் சச்சின் பங்கேரா கூறியதாவது: ஆலியா பட் சைவ உணவை ஊக்குவித்து வருகிறார். அதோடு விலங்குகளிடம் கருணையும், அன்பையும் காட்ட அடுத்த தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறார். நாய், பூனை போன்ற விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தும் பீட்டா அமைப்பின் பிரசாரத்தில் பங்கேற்றார். மேலும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அதற்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பீட்டா இந்தியா பேஷன் விருது வழங்கப்படுகிறது. என்றார்.
இதற்கு முன் இந்த விருதை நடிகர்கள் கபில் சர்மா, ஜான் ஆபிரகாம், நடிகைகள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் கபூர் , அஹுஜா ஆகியோர் பெற்றுள்ளனர்.