கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

1980-90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். இவர் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட சில படங்கள் வருடக்கணக்கில் ஓடின. ஆனால் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மோகன் ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அன்புள்ள காதலுக்கு ஒரு படத்தை இயக்கி, நடித்தார் . அந்த படமும் தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் 2008ஆம் ஆண்டு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழில் ஹீரோவாக ஒரு படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மோகன். சில்வர் ஜூப்ளி ஸ்டார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தாதா 87, பவுடர் போன்ற படங்களை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார் .