ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் ஜனவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‛‛ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதிலுள்ள பெரிய திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது அது நடைபெற்றது. அதேபோல் இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் உள்ள மூன்று ஏரியாக்களை வாங்கியிருக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம், சத்யம் திரையரங்கில் உள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுவோம் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.