சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காகித பூக்கள். எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து, கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக லோகன் மாணிக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரியதர்ஷினி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அப்புச்சி கிராமம் புகழ் பிரவீன் குமார் மற்றும் சமீபத்தில் மறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் நடிகர் தவசி ஆகியோர் நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோஸ் நந்தா இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் முத்து மாணிக்கம் கூறியதாவது : குடி பழக்கத்தாலும், தனது பொறுப்பின்மையாலும் தனது அன்பான மனைவியை பிரிந்து வாடும் கணவன், மீண்டும் தனது உயிரை பணயம் வைத்து அவளை அடைகிறான். ஆனாலும் மனதில் ஏற்பட்ட வடுக்கள் மறையுமா..? ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட்டு விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை திரும்பவும் அடைய முடியாது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. என்றார்.