'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தடைபட்டு தடைபட்டு ஒருவழியாக முடிந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 24 ஏ.எம். நிறுவனம், தங்களிடம் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(டிச., 23) விசாரணைக்கு வந்தபோது, ‛அயலான்' படத்தை ஜன., 3 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன.3க்கு தள்ளி வைத்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.