என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அவரது பெயரை நீக்கினார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் சோசியல் மீடியாவிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி இருக்கிறார். இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. அப்படி என்றால் பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனஸை விவாகரத்துச் செய்யப் போகிறாரா? என்ற கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அதை மறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதோடு பிரியங்காவின் தாயாரும் இதை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதுப்பற்றி பிரியங்கா சோப்ரா அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளத்தில் பயனரின் பெயர் என்னுடைய பக்கத்தில் பொருந்த வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. சோசியல் மீடியா நண்பர்களே அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரம் பெரிதாவதற்கு முன்பே தனது கணவர் நிக் ஜோனஸ்க்கும், தனக்குமிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.