இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.
விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் படம் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்த படம் ஐந்து நாட்களில் ரூ.200 கோடியைத் தாண்டி விட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ஸ்பைடர்மேன்' படம் இப்படத்திற்குக் கடுமையான போட்டியை தெலுங்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் ஏற்படுத்தியது. அதையும் மீறி இப்படம் வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ரூ.15 கோடி, கர்நாடகத்தில் ரூ.16 கோடி, கேரளாவில் ரூ.8 கோடி, வட இந்தியாவில் ரூ.25 கோடி, அமெரிக்காவில் ரூ.15 கோடி, தெலுங்கு மாநிலங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இந்த முதல் பாகத்திற்குக் கிடைத்த வெற்றி, அடுத்தாண்டு கடைசியில் வெளிவர உள்ள இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.