ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து இப்போது அகில இந்திய நட்சத்திரமாகி இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தை சேர்ந்தவர். கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கிற்கு வந்து முன்னணி நடிகை ஆனார். கீதா கோவிந்தம், டீயர் காம்ரேட் ஆகிய படங்களில் இருவரும் நடித்தனர். அப்போது முதலே இவர்களுக்குள் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் மவுனம் காத்து வந்தார்கள்.
இப்போது சில நிகழ்வுகளை பார்க்கும் போது இருவரும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா படப்பிடிப்புக்காக பாரீஸ் சென்றார். அவர் பாரீசில் தங்கி இருக்கும்போது ராஷ்மிகா மந்தனாவும் பாரீஸ் சென்றார். இப்போது புதிய ஆதாரமாக இருவரும் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து பின்புற வாசல் வழியாக ஒருவர் பின் ஒருவராக வெளியேறி ஒரே காரில் ஏறிச் செல்லும் படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனால் இருவரும் காதலிப்பது உண்மை தான் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.