பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து இப்போது அகில இந்திய நட்சத்திரமாகி இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தை சேர்ந்தவர். கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கிற்கு வந்து முன்னணி நடிகை ஆனார். கீதா கோவிந்தம், டீயர் காம்ரேட் ஆகிய படங்களில் இருவரும் நடித்தனர். அப்போது முதலே இவர்களுக்குள் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் மவுனம் காத்து வந்தார்கள்.
இப்போது சில நிகழ்வுகளை பார்க்கும் போது இருவரும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா படப்பிடிப்புக்காக பாரீஸ் சென்றார். அவர் பாரீசில் தங்கி இருக்கும்போது ராஷ்மிகா மந்தனாவும் பாரீஸ் சென்றார். இப்போது புதிய ஆதாரமாக இருவரும் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து பின்புற வாசல் வழியாக ஒருவர் பின் ஒருவராக வெளியேறி ஒரே காரில் ஏறிச் செல்லும் படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனால் இருவரும் காதலிப்பது உண்மை தான் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.