என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

அரசியலில் இருந்து ஒதுங்கியபின் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸையும், ஹீரோவாகவே துவங்கிய சிரஞ்சீவி தற்போது கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டவர், தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154 படமும் கடந்த மாதம் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி (கே.எஸ்.ரவீந்திரா) என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவி அன்டர்கவர் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்திற்கு வால்டர் வீரய்யா என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடைபெறும் கதையாக இந்தப்படம் உருவாகிறது.