இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக, யுவன்சங்கர் ராஜா இசையில் 'நான் பார்த்த முதல் முகம் நீ' என தொடங்கும் பாடலை .விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தாயின் பெருமையை சொல்லும் விதமாக சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப்பாடல் நேற்றுமுன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த நெகிழ்சியான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “ இந்த பாடலை ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரிக்கு ... என் அம்மாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.. என்னுடைய அம்மாவுக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்கு இருந்தது. இதன்மூலமாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்“ என கூறியுள்ளார்
இந்த பதிவு மூலமாக இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நாயகனின் அம்மாவும் போலீஸ் அதிகாரி தான். அதில் நடித்த ராதிகாவின் பெயரும் கூட மீனாகுமாரி தான். அந்தவகையில் தனது தாயின் பெயரையும் அவர் வகித்த பதவியையும் தான் அந்தப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அதேசமயம், கதைப்படி மீனாகுமாரி என்கிற தனது தாயின் பெயருள்ள அந்த கதாபாத்திரத்தின் மருமகளாக நயன்தாரா வரவேண்டும் என கதை எழுதும்போதே எப்படி தீர்மானித்து இருப்பார் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது. இவர்கள் காதல், திருமணத்தில் இணையும்போது, அவர் எழுதிய கதையும் நிஜமாகி விடும் அல்லவா?