திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

உலக அளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கர் விருது தான் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் சர்வதேச அளவில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற ஒரு விருதும் வழங்கப்படுகிறது.
94வது ஆஸ்கர் விருதுகளுக்கான வெளிநாட்டுப் படங்களின் போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்ப்படமான 'கூழாங்கல்' படம் போட்டியிடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் விருதுகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
93 நாடுகளில் தயாரான படங்கள் அந்த ஒரு விருதுக்காக போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் முதன் முதலாக சோமாலியா நாட்டிலிருந்து ஒரு படம் இடம் பெறுகிறது. இந்தப் படங்களிலிருந்து 15 படங்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். அதற்கான அறிவிப்பு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'கூழாங்கல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். தங்களது படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்டரில், “பட்டியலில் எங்கள் படத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. கனவு, உண்மை, பாக்கியம்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.




