இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உலக அளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கர் விருது தான் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் சர்வதேச அளவில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற ஒரு விருதும் வழங்கப்படுகிறது.
94வது ஆஸ்கர் விருதுகளுக்கான வெளிநாட்டுப் படங்களின் போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்ப்படமான 'கூழாங்கல்' படம் போட்டியிடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் விருதுகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
93 நாடுகளில் தயாரான படங்கள் அந்த ஒரு விருதுக்காக போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் முதன் முதலாக சோமாலியா நாட்டிலிருந்து ஒரு படம் இடம் பெறுகிறது. இந்தப் படங்களிலிருந்து 15 படங்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். அதற்கான அறிவிப்பு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'கூழாங்கல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். தங்களது படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்டரில், “பட்டியலில் எங்கள் படத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. கனவு, உண்மை, பாக்கியம்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.