இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

உலக அளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கர் விருது தான் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் சர்வதேச அளவில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற ஒரு விருதும் வழங்கப்படுகிறது.
94வது ஆஸ்கர் விருதுகளுக்கான வெளிநாட்டுப் படங்களின் போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்ப்படமான 'கூழாங்கல்' படம் போட்டியிடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் விருதுகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
93 நாடுகளில் தயாரான படங்கள் அந்த ஒரு விருதுக்காக போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் முதன் முதலாக சோமாலியா நாட்டிலிருந்து ஒரு படம் இடம் பெறுகிறது. இந்தப் படங்களிலிருந்து 15 படங்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். அதற்கான அறிவிப்பு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'கூழாங்கல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். தங்களது படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்டரில், “பட்டியலில் எங்கள் படத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. கனவு, உண்மை, பாக்கியம்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.