தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாநாடு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை முதலில் கலைஞர் டிவி வாங்க தான் பேசி வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் வருகிற பொங்கலுக்கு மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டது.
ஆனால் மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள சோனிலிவ் நிறுவனமோ, மாநாடு படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 75 நாட்கள் ஆன பிறகே டிவியில் ஒளிபரப் பப்பட வேண்டும் என்று ஒரு கண்டிசனை போட்டு விட்டது. அதன்காரணமாகவே கலைஞர் டிவி பின்வாங்கிவிட இப்போது மாநாடு டிவி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகியிருப்பதால் நான்கு வாரங்கள் கழித்து அதாவது இந்த மாதம் இறுதியில் சோனி லிவ் ஓடிடியில் மாநாடு படம் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.