4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாநாடு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை முதலில் கலைஞர் டிவி வாங்க தான் பேசி வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் வருகிற பொங்கலுக்கு மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டது.
ஆனால் மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள சோனிலிவ் நிறுவனமோ, மாநாடு படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 75 நாட்கள் ஆன பிறகே டிவியில் ஒளிபரப் பப்பட வேண்டும் என்று ஒரு கண்டிசனை போட்டு விட்டது. அதன்காரணமாகவே கலைஞர் டிவி பின்வாங்கிவிட இப்போது மாநாடு டிவி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகியிருப்பதால் நான்கு வாரங்கள் கழித்து அதாவது இந்த மாதம் இறுதியில் சோனி லிவ் ஓடிடியில் மாநாடு படம் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.