ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் |
"பூ படத்தில், மாரி என்ற கேரக்டரில், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், பார்வதி. அதற்கு பிறகு, ஏனோ, இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது, நான்காண்டு இடைவெளிக்கு பின், பரத்பாலா இயக்கும்,"மரியான் படத்தில் நடிக்கிறார். "ஏன், இந்த நீண்ட காத்திருப்பு என, அவரிடம் கேட்டபோது,"நடிப்பை வெளிப்படுத்தும், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என, காத்திருந்தேன். என், காத்திருப்பு வீண் போகவில்லை. "மரியான் படத்தில், என் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும், வாய்ப்பு கிடைத்ததால், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். தனுஷ், பரத் பாலா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப் பிரபலமானவர்களுடன், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்பது, பெருமைக்குரிய விஷயம் தானே. இனிமேல், தமிழில், எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்என, பெருமிதப்படுகிறார், பார்வதி.