பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |

மம்முட்டி நடிப்பில் கே.மது இயக்கிய ஒரு சி.பி.ஐ டயரி குறிப்பு மலையாள படம் 1988ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதில் மம்முட்டியுடன் லிஸி, ஊர்வசி, சுரேஷ் கோபி, முகேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989ம் ஆண்டும், மூன்றாம் பாகம் சேதுராம அய்யர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004ம் ஆண்டும், 4ம் பாகம் நேரறியான் சி.பி.ஐ என்ற பெயரில் 2005ம் ஆண்டும் வெளியானது. தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இதன் 5ம் பாகம் தயாராகிறது.
இதிலும் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். மது இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ சேதுராம அய்யர் ஓய்வு பெற்று விடுகிறார். என்றாலும் போலீசால் தீர்க்க முடியாத ஒரு வழக்கை தீர்த்து வைக்க அவர் சிறப்பு அதிகாரியாக அழைக்கப்படுகிறார் என்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவில் ஒரே இயக்குனர், ஒரே ஹீரோ இணைந்து பணியாற்றும் 5வது பாகம் பட இதுதான் என்கிறார்கள்.




