வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மம்முட்டி நடிப்பில் கே.மது இயக்கிய ஒரு சி.பி.ஐ டயரி குறிப்பு மலையாள படம் 1988ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதில் மம்முட்டியுடன் லிஸி, ஊர்வசி, சுரேஷ் கோபி, முகேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989ம் ஆண்டும், மூன்றாம் பாகம் சேதுராம அய்யர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004ம் ஆண்டும், 4ம் பாகம் நேரறியான் சி.பி.ஐ என்ற பெயரில் 2005ம் ஆண்டும் வெளியானது. தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இதன் 5ம் பாகம் தயாராகிறது.
இதிலும் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். மது இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ சேதுராம அய்யர் ஓய்வு பெற்று விடுகிறார். என்றாலும் போலீசால் தீர்க்க முடியாத ஒரு வழக்கை தீர்த்து வைக்க அவர் சிறப்பு அதிகாரியாக அழைக்கப்படுகிறார் என்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவில் ஒரே இயக்குனர், ஒரே ஹீரோ இணைந்து பணியாற்றும் 5வது பாகம் பட இதுதான் என்கிறார்கள்.




