லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா |

மம்முட்டி நடிப்பில் கே.மது இயக்கிய ஒரு சி.பி.ஐ டயரி குறிப்பு மலையாள படம் 1988ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதில் மம்முட்டியுடன் லிஸி, ஊர்வசி, சுரேஷ் கோபி, முகேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989ம் ஆண்டும், மூன்றாம் பாகம் சேதுராம அய்யர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004ம் ஆண்டும், 4ம் பாகம் நேரறியான் சி.பி.ஐ என்ற பெயரில் 2005ம் ஆண்டும் வெளியானது. தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இதன் 5ம் பாகம் தயாராகிறது.
இதிலும் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். மது இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ சேதுராம அய்யர் ஓய்வு பெற்று விடுகிறார். என்றாலும் போலீசால் தீர்க்க முடியாத ஒரு வழக்கை தீர்த்து வைக்க அவர் சிறப்பு அதிகாரியாக அழைக்கப்படுகிறார் என்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவில் ஒரே இயக்குனர், ஒரே ஹீரோ இணைந்து பணியாற்றும் 5வது பாகம் பட இதுதான் என்கிறார்கள்.




