'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? |

சூர்யாவின் முக்கியமான சில படங்களில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் முக்கிய படங்களாகும். இந்த படங்களில் தான் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக செதுக்கினார் பாலா. ஆனபோதிலும் அதன்பிறகு அவர்கள் இணையாத நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.
ஜெயபீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சிவா, ரவிக்குமார் என சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில் தற்போது டிசம்பரில் மாதம் முதல் பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை முதலில் அதர்வாவை வைத்து பாலா இயக்கயிருந்த நிலையில் சூர்யா தயாரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று கதையில் செய்த சில திருத்தங்கள் காரணமாக இப்போது அந்த படத்தில் சூர்யாவே நாயகனாகி விட்டார்.