வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தென்னிந்தியத் திரையுலகத்தில் குறிப்பாக தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பான்-இந்தியா படங்கள் என அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவர்களுடன் ஒப்பிடும் போது பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் பான்-இந்தியா ஸ்டார், இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால் பான்-வேர்ல்டு ஸ்டார் ஆக இருந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தென்னிந்தியப் படங்களுக்கு தனது படங்களின் மூலம் முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ரஜினிகாந்த். அவருடைய படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல இடங்களில் வசூலைக் கொட்டியது. அவரது வழியைப் பின்பற்றித்தான் பல தென்னிந்திய நடிகர்கள் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம், ரஜினிகாந்த்தின் சமீபத்திய படங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறிப்பிடத்தக்க அளவுக்கு வசூல செய்யும் நிலை உருவாகியுள்ளது. மற்ற மாநிலங்களில் வசூலில் தள்ளாடுகின்றன. பொதுவாக ஆந்திரா, தெலங்கானாவில் ரஜினிகாந்த் படங்கள் 50 கோடி வரை வசூலித்துள்ளன. சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் 10 கோடி வசூலையே தடுமாறித்தான் பெற வேண்டியதாகி உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாத்த படத்தை சிலர் மட்டுமே 200 கோடி வசூல் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தீபாவளிக்கும் அடுத்த சில நாட்களுக்கும் மட்டுமே படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. அதன்பின் மழை காரணமாக மிகவும் மோசமாகிவிட்டது என்பதுதான் உண்மை நிலை என்கிறார்கள்.
அடுத்து சிறப்பான படம் ஒன்றைக் கொடுத்துவிட்டு நடிப்பிலிருந்து ரஜினிகாந்த் ஓய்வு பெறுவார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.




