கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் |
டிவியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து முன்னணி நாயகனாக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் வருவதற்கு முன்பே முன்னணி நாயகர்களாக இருந்த சிலரை தனது வெற்றிகள் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார். அதோடு அவர்களது சம்பளத்தை விடவும் அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.
தற்போது நடித்து வரும் 'டான்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை 'ஜதி ரத்னலு' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். 21வது படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதால் 35 கோடி சம்பளம் என்கிறார்கள். இப்படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கப் போகிறாராம்.
விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தமிழ், தெலுங்கு என்ற கான்செப்டில் நுழைய உள்ளார்.