ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிவியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து முன்னணி நாயகனாக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் வருவதற்கு முன்பே முன்னணி நாயகர்களாக இருந்த சிலரை தனது வெற்றிகள் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார். அதோடு அவர்களது சம்பளத்தை விடவும் அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.
தற்போது நடித்து வரும் 'டான்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை 'ஜதி ரத்னலு' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். 21வது படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதால் 35 கோடி சம்பளம் என்கிறார்கள். இப்படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கப் போகிறாராம்.
விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தமிழ், தெலுங்கு என்ற கான்செப்டில் நுழைய உள்ளார்.