Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பான் - இந்தியா படங்கள், தமிழ் சினிமா எப்போது மாறும் ?

18 நவ, 2021 - 01:10 IST
எழுத்தின் அளவு:
When-tamil-films-will-do-more-Pan-Indian-movies
Advertisement

ஒரே ஒரு தெலுங்கு இயக்குனர், இந்திய சினிமாவையே புரட்டிப் போட்டார். 'பாகுபலி' என்ற இரண்டு பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த ராஜமவுலி தான் அவர். இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா தான் என்றிருந்தது. இப்போதோ தென்னிந்திய சினிமா என்றாலே அது தெலுங்கு சினிமா என்று சொல்லுமளவிற்கு 'பாகுபலி' படங்களுக்குப் பின்னர் மாறிவிட்டது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு சில தெலுங்கு திரைப்படங்கள்தான் பான்-இந்தியா படங்களாக இந்திய சினிமாவை ஆட்டிப் படைக்க உள்ளது. அடுத்த மாதத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 1', நானி நடித்துள்ள 'ஷியாம் சிங்க ராய்', ஜனவரி மாதத்தில் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்', மற்றும் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்', ஆகிய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளிவர உள்ளன. அதன்பிறகும் மேலும் சில படங்கள் இப்படி வெளியாக உள்ளன.

தமிழில் அப்படியான படங்களைக் கொடுக்கும் அளவிற்கு இங்குள்ள ஹீரோக்கள் தங்களை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறார்கள். இந்த மாதம் சூர்யா நடித்து ஓடிடியில் வெளிவந்த 'ஜெய் பீம்' படம் மட்டும் பான்-இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியானது. இப்படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'அண்ணாத்த' படம் கூட தெலுங்கில் ஓடவில்லை. அடுத்து அஜித் நடித்துள்ள 'வலிமை', விஜய் நடிக்கும் 'பீஸ்ட்', சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்கள் வர உள்ளன. இந்தப் படங்களை பான்-இந்தியா படங்களாக வெளியிட அவற்றின் தயாரிப்பாளர்கள் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறி தான்.

பான்-இந்தியா படம் என்பது படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அனைத்து இந்திய ரசிகர்களுக்குமான படமாக திட்டமிடல் வேண்டும். அப்படி எந்தப் படத்தையும் இந்த முன்னணி ஹீரோக்கள், இதுவரையிலும் ஆரம்பிக்கவில்லை.

ஒரே ஒரு ஆறுதலாக மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' பான்-இந்தியா படமாக வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், படத்திற்கான பிரமோஷனை இன்னும் சரியான அளவில் ஆரம்பிக்கவில்லை. படத்தின் டைட்டிலை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளார்கள். ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் இந்தப் படம் இன்னும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மை.

தமிழ் சினிமாவிலும் சிறந்த இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், தெலுங்கு சினிமா அளவிற்கு பிரம்மாண்டமான படங்களை உருவாக்க தயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2022ல் வரும் 'பொன்னியின் செல்வன்' மூலம் ஏதாவது மாற்றம் நிகழுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'டாக்டர்' வெற்றி - சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்?'டாக்டர்' வெற்றி - சம்பளத்தை ... நிறைய பிரச்னை கொடுக்குறாங்க : மேடையில் சிம்பு கண்ணீர் நிறைய பிரச்னை கொடுக்குறாங்க : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in