Advertisement

சிறப்புச்செய்திகள்

மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிறைய பிரச்னை கொடுக்குறாங்க : மேடையில் சிம்பு கண்ணீர்

18 நவ, 2021 - 01:39 IST
எழுத்தின் அளவு:
Simbu-cried-at-Maanaadu-Event
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ஆரம்பத்தில் கலகலப்பாகவும், முடிவில் கண்ணீர் மல்கவும் பேசினார்.

அவர் கூறுகையில், ‛‛வெங்கட்பிரபுவும், நானும் ஒவ்வொரு முறையும் படம் பண்ண வேண்டும் என்போம், ஆனால் வேறு ஒருவரை வைத்து படம் பண்ணிவிடுவார். இந்த படத்திற்கு ஒன்லைன் மட்டும் தான் சொன்னார். மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக பண்றேன் என்றேன். படத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு ஜாலியாக தெரியும். ஆனால் அதற்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்கு தான் தெரியும். அதை சொன்னால் புரியாது, படம் பார்க்கும்போது புரியும். இந்த படத்தில் பணியாற்றிய மொத்த கலைஞர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் அவரை பிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

எனக்கு எல்லாமே யுவன் தான். எங்கள் இருவருக்கும் அப்படி என்ன மாதிரி புரிதல் உள்ளது என இதுவரை தெரியாது. நான் என்ன சொன்னாலும் அதை பொறுமையாக கேட்டுக் கொள்வார். அதனால் அவரிடம் உங்க ராசி, நட்சத்திரம் என்ன என்று சொல்லுங்க, அது மாதிரியே எனக்கு பெண் பார்ப்போம் என்பேன். ஏனென்றால் என்னை தாங்கிக் கொள்ளும் இதயமும், புரிந்து கொள்ளும் இதயமும் அவர் தான் என கலகலப்பாக பேசினார்.

கடைசியாக எனக்கு நிறைய பிரச்னை கொடுக்குறாங்க, பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை மட்டும் நீங்கள்(ரசிகர்கள்) பார்த்துக் கொள்ளுங்கள் என மேடையிலேயே கண்கலங்கினார். அவரை மேடையில் இருந்த மாநாடு படக்குழுவினர் சமாதானம் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பான் - இந்தியா படங்கள், தமிழ் சினிமா எப்போது மாறும் ?பான் - இந்தியா படங்கள், தமிழ் சினிமா ... கேப்டன்-ஆன ஆர்யா கேப்டன்-ஆன ஆர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in