Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சப்பைக்கட்டு கட்டுவது சிறந்த பண்பு அல்ல.. சூர்யா கண்டிக்கத்தக்கவரே

18 நவ, 2021 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Producer-MS-Murugaraj-Condemnation-Suriya-and-jaibhim-issue

சென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு எதிராக வன்னியர்கள் போர்க்கொடி துாக்கிய நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பக்ரீத் படத்தை எடுத்த எம்10 தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் வெளியிட்ட அறிக்கை: படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை சீர்குலைக்காமல் வைப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை, வேதம் புதிது படம் எடுத்தவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து, படம் எடுத்ததை கண்டித்து, அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல், சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தால் கண்டிக்க வேண்டியவரே.

படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் சூர்யாவின் சாதியையோ அவருக்கு ஆதரவா உள்ளவர்களின் சாதி பற்றியோ ஒரு படைப்பு வரும் பட்சத்தில் அது தமிழ் சமூகங்களுக்கு இடையேயான சாதிய கலவரங்களுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது என்பதை நாமும், சூர்யாவும் புரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திரம் என்ற பெயரில், ரோட்டில் நிர்வாணமாக நடப்பது, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அதுபோன்ற அசிங்கம் தான், சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். ஆகச்சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும், புனைவு பெயர்களும் எதற்காக? குறியீடுகளை நீக்கி விட்டோம் என சப்பைக்கட்டு கட்டுவது, சிறந்த கலைஞரின் சிறந்த பண்பு அல்ல.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் ஜெயம்பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யா, பா.ம.க., இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. சென்னை, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் போலீசார் பாதுகாப்புக்காக செல்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.50 கோடி கிளப்பில் இணைந்த குருப்ரூ.50 கோடி கிளப்பில் இணைந்த குருப் 24 மணி நேரத்தில் 31 மில்லியனைக் கடந்த 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' டிரைலர் 24 மணி நேரத்தில் 31 மில்லியனைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Thayaparan A - CHENNAI,இந்தியா
20 நவ, 2021 - 09:53 Report Abuse
Thayaparan A இது ஒரு "போலீஸ் அத்துமீறல்" அதனால் உண்டான கொலை பற்றிய வழக்கு ஆகும். இந்த வழக்கில் ஒரு வரி கூட ஜாதியின் காரணமாக வன்மம் ஏற்பட்டது என்ற வினா எழவில்லை. இவ்வாறு இருக்கையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தவறாக வழிகாட்ட, படிப்பறிவற்ற சினிமாக்காரர்கள் இந்த வழக்கில் வியாபார நோக்கோடு ஜாதிய சாயத்தை பூசி படமெடுத்து லாபம் பார்த்து விட்டார்கள். வெறுமனே "போலீஸ் அத்துமீறல்" வகை படமென்றால் சூர்யா கல்லா நிரம்பி இருக்காது அனைத்தும் வியாபாரம். படைப்பு சுதந்திரம் என்பதெல்லாம் வெங்காயம், புண்ணாக்கு
Rate this:
s t rajan - chennai,இந்தியா
19 நவ, 2021 - 20:33 Report Abuse
s t rajan ஏனய்யா ஒரு க்ருத்துவ அந்தோனியை குருமூர்த்தி என்று மாற்றி சொன்னீர் என்று கேட்டால், ஆமாம் தவறு செய்துவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்தால் போதுமே. திரு. சூரியா, உங்களுக்கு நிரந்தர ஆதரவு கொடுப்பவர்கள் மக்களே அன்றி, விரல் விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பவாத அரசியல் வ்யாதிகள் அல்ல. மேலும், நீங்கள் இந்த படத்தில் வெறும் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. மறந்து விடாதீர்கள். உண்மையை சொல்ல விளைந்த நீங்கள் ஏன் பெயர் பித்தலாட்டம் செய்து, இன்னும் ஒருவர் இந்த உங்களின் இந்த episode ஐ படம் எடுக்கத் தூண்டுகிறீர். மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வையுங்கள், அன்பரே.
Rate this:
senthil Kumar R - avadi,இந்தியா
19 நவ, 2021 - 17:51 Report Abuse
senthil Kumar R ooru ru pattal thaan kuthadi iku kondatam, Nadu nasama porathhu ku karranam cinema karanum,karrium.please band the cinema.
Rate this:
V.Kumar - Salem ,இந்தியா
19 நவ, 2021 - 10:03 Report Abuse
V.Kumar சூர்யா உண்மையிலேயே அறநெறியுடனும் மனித பண்புடனும் நடப்பவராக இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு சப்பை கட்டு கட்டாமல் நேர்மையாக பதில் கூறட்டும். 1. படம் எடுப்பதற்கு முன் ஏன் சம்மந்தப்பட்ட குடும்பத்தாரின் அனுமதி பெறவில்லை? 2. படம் வெளியான பின், பிரச்சனைகள் ஏற்பட்ட பின்னும், தானாக சென்று அவர்களை ஏன் சந்திக்கவில்லை? 3. அவர்களின் கதையை திருடிவிட்டு, 48கோடிக்குமேல் காசு பார்த்து, தானே முன்வந்து அவர்களுக்கு நியாயமாக சேரவேண்டிய தொகையை தராதது ஏன்? 4. பாதிக்கப்பட்ட குறவர் சமூகத்திற்கு நன்கொடை தராமல், இருளர் சமூகத்திற்கு, அதுவும் நீங்கள் முதல்வரிடம் நன்கொடை நாளில் இல்லாத ஒரு டிரஸ்ட்க்கு, படத்தை பிரமோட் செய்ய கொடுத்தீர்களா? 5. அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்க 13ஆண்டுகளுக்கு மேல் போராடிய வன்னியரான கோவிந்தனையும், நீதிபதி மிஸ்ராவையும், படத்தில் இருட்டடிப்பு செய்தது ஏன்? சூர்யாவுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ் திரையுலக மாபியாவும் நேர்மையாக பதில் கூறலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in