‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

நமீதா மாரிமுத்து இன்ஸ்டாகிராம் லைல்வில் பிக்பாஸ் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் நமீதா மாரிமுத்து யாரும் எதிர்பாரத வகையில் வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். நமீதா மாரிமுத்து வெளியேற அவருக்கும் தாமரைச் செல்விக்கும் ஏற்பட்ட வாக்குவாதமும் அதனை தொடர்ந்து நடந்த சில வேண்டாத சம்பவங்களும் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் உடல்நல பிரச்னையால் அவர் வெளியேறியதாக மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், யார் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக இருப்பார்கள் என்று எழுப்பிய கேள்விக்கு சிபி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்டு ரவுண்டில் போவீர்களா என்று கேட்டதற்கு, "போகலாம் போகாமலும் இருக்கலாம், பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.