நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தேன்மொழி பி.ஏ. சீரியல் தொடரப்போவதாக அறிவிப்பு வெளிவந்த நிலையில் மீண்டும் சீரியல் முடியப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த தொடர்களில் ஒன்று தேன்மொழி பி.ஏ. விஜே ஜாக்குலின் கதாநாயகியாக நடிக்கும் இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானபோது இந்த தொடர் முடியப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்த தொலைக்காட்சி நிறுவனம் தேன்மொழிக்கு எண்ட்கார்டா? என சீரியலை தொடரப் போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தேன்மொழி பி.ஏ. சீரியல் மீண்டும் முடியப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுவிட்டதாக புகைப்படங்களும் பரவி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் மாற்றி மாற்றி சொல்கிறார்களே என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.