பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நமீதா மாரிமுத்து இன்ஸ்டாகிராம் லைல்வில் பிக்பாஸ் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் நமீதா மாரிமுத்து யாரும் எதிர்பாரத வகையில் வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். நமீதா மாரிமுத்து வெளியேற அவருக்கும் தாமரைச் செல்விக்கும் ஏற்பட்ட வாக்குவாதமும் அதனை தொடர்ந்து நடந்த சில வேண்டாத சம்பவங்களும் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் உடல்நல பிரச்னையால் அவர் வெளியேறியதாக மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், யார் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக இருப்பார்கள் என்று எழுப்பிய கேள்விக்கு சிபி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்டு ரவுண்டில் போவீர்களா என்று கேட்டதற்கு, "போகலாம் போகாமலும் இருக்கலாம், பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.