வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
நான் அதிர்ஷ்டத்தால் நடிகையானேன்; தோல்வி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன், என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார். ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். சினிமாத்துறை அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா மேல் எனக்கு சிறுவயதில் இருந்தே மோகம். படம் என்றாலே பைத்தியம் ஆகிவிடுவேன். ஒரு படம் விடாமல் பார்ப்பேன். இப்போது நடிகையாகி விட்டேன். இதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.
இப்போது தெலுங்கில் இருபடங்கள் கைவசம் உள்ளன. தமிழில் முனி-3 படத்தில் நடிக்கிறேன். இந்த ஆண்டு சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டேன். படங்கள் தோல்வி பற்றி கவலைப்பட மாட்டேன். ஹிட் படங்கள் கொடுக்காவிட்டாலும் படவாய்ப்புகள் வருகின்றன. எத்தனையோ திறமைசாலிகள் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெளியே இருக்கின்றனர். இந்த துறைக்கு வந்ததே போதும். எனக்கு தைரியம் அதிகம். பிரச்சினைகளை பார்த்து துவண்டுவிட மாட்டேன். தைரியமாக எதிர்கொள்வேன். அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைமைக்கு உயர்ந்து இருக்கிறேன். எதற்கும் பயம் இல்லை, என்று கூறியுள்ளார்.