அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. கடந்த வருடம் நிகழ்ந்த கிரேன் விபத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடக்கவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி 'இந்தியன் 2' படத்தை முன்னுரிமை கொடுத்து ஷங்கர் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது ஷங்கர் தான் இயக்கி வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படத்தை ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. அதற்குள் கமல்ஹாசனும் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துவிடுவாராம்.
'இந்தியன் 2' படத்திற்காக 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிப்பட்ட நிலையில் படம் மீண்டும் ஆரம்பமாகுமா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமானால் அடுத்த ஆண்டுக்குள் படம் வர வாய்ப்புள்ளது.